Wednesday, April 4, 2018

இன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டுமாம்: இல்லையென்றால் அவ்வளவு தானாம்!


தினம் தினம் திருநாளே!' ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எப்படி என்பதை பார்க்கலாம்..
மேஷம்
இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அரவணைத்துச் செல்லவும். வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். 
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.
கன்னி
எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.
துலாம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும்.
சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்
காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோனம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
தனுசு
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் தேவையறிந்து அவருக்கு உதவுவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகரம்
தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கும்பம்
தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
மீனம்
இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

Sunday, April 1, 2018

18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓர் முக்கிய செய்தி



புதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.


இதன் மூலம் இலங்கையின் வரிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொருளாதார நிவுணர்கள் கூறுகின்றனர்.


இந்த திருத்தத்தின் மூலம் புதிய வரிமுறைகளும் அறிமுகம் செய்யப்படுகின்ற அதேவேளை, பல துறைகள் சார்ந்த வரிமுறைகளிலம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் ஒன்று பேணப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த வரி சட்ட திருத்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டது.


இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தினால வழங்கப்பட்ட உத்தரவொன்றின் அடிப்படையில் மீள் திருத்தங்கள் செய்யப்பட்டு, செப்டெம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


இந்த புதிய வரிகள் தொடர்பான சட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 29, 2018

ஆடை இல்லாமல் கூட இதை நான் செய்வேன்: சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!


சமீப காலமாக ஷில்பா ஷெட்டி யோகாவில் தான் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகிறார். இந்த வயதிளும் தனது உடலமைப்பின் காரணம் உடற்பயிற்சி மற்றும் யோகா என்று குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.


ஷில்பா ஷெட்டி பல ஆண்டுகளாக ஹிந்தி,தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நாடித்து வந்தவர்.42 வயதாகும் ஷில்பா ஷெட்டி இந்த வயதிலும் தனது உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்துள்ளார்.அடிக்கடி தனது உடற்பயிற்சி விடியோகளை சமூக வளைதளத்தில் வெளியிடுவார் ஷில்பா ஷெட்டி. தற்போது படங்களில் அவ்வளவாக காட்சி அளிக்காமல் இருந்தாலும் அவ்வப் போது தன்னை பற்றிய தகவல்களை தன்னுடைய சமூக பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.




ஷில்பா ஷெட்டி பொது விழாவிற்கு சென்றாலும் மிகவும் கவர்ச்சியான உடைகளிலே செல்வார்.நடிப்பையும் தாண்டி நடிகை ஷில்பா யோகா குறித்த சில புத்தகங்களையும் வெளி யிட்டுள்ளார் . சமீபத்தில்தல் தனது யோகா பயிற்சியை குறித்த புத்தகத்தை வெளியிட்ட ஷில்பா ஷெட்டி தனது யோகா கலை குறித்து பேசியுள்ளார்.




அப்போது தனது யோகா கலையை அனைவர் முன்னரும் செய்து காட்டி அசத்தினார். மேலும் தினமும் யோகா செய்வதால் தான் ஃபிட்டாகவும், இளமையாகவும் உள்ளேன் என்றும் தன்னால் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும் .


ஆடையுடன் செய்தால் சில சமயம் யோகா செய்யும் போது கால் வழுக்கிவிட வாய்ப்புள்ளது அதனால் ஆடை இல்லாமல் யோகா செய்தால் மிகவும் சுலபம் என்று பேசியுள்ளார்.

Wednesday, March 28, 2018

இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை!முப்பதாயிரம் பெண்கள் விண்ணப்பம்.



முப்பது பேர் தேர்ந்து எடுக்கிறார்கள்.


தினமும் ஒவ்வோரு வடிவில் நிகழ்ச்சியை தயாரித்து சந்தையில் விட்டுள்ளனர்.

நம்மூர் பெண்டுகளும் விட்டு வைக்கவில்லை 


விண்ணப்பித்துள்ளனர்! தீவகத்தில் இருந்து கனடாவில் குடிபெயர்ந்த சுசானா என்ற சுமார் அழகியும் போட்டியில் இடம் பிடித்து கரம் பிடிக்கும் அளவுக்கு கதை செல்கிறது.


நம்மூர் பொண்னு சங்கீதா விஜய்யை கரம்பிடித்தாள் யாரும் வசைபாடவில்லை. காரணம் அதில் ஒரு நேர்மை இருந்தது.


இது பக்காவா பணம் சம்பாதிக்க T v சனலும் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் போட்ட திட்டம்.

அதிலும் வேடிக்கை என்னவென்றால் ஆர்யா என்ற ஆசாமி நிகழ்ச்சி முடியும் போது அதில் தெரிவாகியுள்ள அத்தனையும் ருசி பார்த்து நல்ல வெள்ளை கொழும்பான் மாம்பழத்தை துணையாக்குவார் போல கதை நகருகிறது!


கலர்ஸ் தமிழ் T v காறன் மக்கள் காறி துப்பும் எச்சியை விட காசு பாக்கிறதில தான் குறியாக உள்ளான் முடிந்தால் கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்டான் பக்கிரி பயல்


வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்ததில் ஐம்பது வீதம் தமிழ் தமிழ் என்று சாக மிகுதி ஐம்பது வீதம் தறிகெட்டு விட்டது தொட்டது பாதி விட்டது மிகுதியாக இவ்வாறான செயல்களை செய்து நம்மூரை பெருமை படுத்திறத பாராட்டியே ஆக வேண்டும் சுசானாவின் தாய் தந்தையர்களே அருமையான வளர்ப்பு தலை வணக்குகிறோம்.


பட்டி தொட்டி எல்லாம் தமிழன் புகழ் பரவும் என்பது சுசானா போன்ற பெண்களாலே தான் முடியும்! கனடா போன்ற நாடுகளில் அரசியல் வர்த்தகம் பொறியியல் எனக் கலக்கும் பெண்களோடு இப்படியும் இரண்டு ஒன்று உலாவுதலும் பெருமையே.


அன்புடன் ஸ்ரீரங்கன்.

Tuesday, March 27, 2018

பேருந்தில் செல்லும் போது வாந்தி வருவது வழக்கமாகிவிட்டதா? கவலை வேண்டாம் ஈஸியாக தடுக்கலாம்




சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளலாமல் வாந்தி வரும். பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது போன்ற ஆசைகள் இருக்கும்.

ஆனால், பேருந்தில் பயணித்தாலே மயக்கம், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது என்றுமே கனவாகவே இருந்துவிடுகிறது. அதிலும், மலை பிரதேசத்துக்கு பேருந்தில் பயணிப்பது என்பது கெட்ட கனவு.


வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒருசில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

இதனை ஒரு நோயை போல பாவிக்க தேவையில்லை. லட்சகணக்காண பேருக்கு இதுபோன்ற விளைவுகள் இருக்கும். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்வது போன்றவை தேவையற்றவை. இதை எளிய வகையில் சரி செய்யலாம்.

பயணத்துக்கு முன் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். புகை பிடித்தல், மதுபானம், காரமான மசாலா உணவுகள், மிகுந்த வாசனை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தி வாந்தியை உண்டாக்கும்.
மிதமான உணவுகளையே உண்ண வேண்டும். அரைவயிறு சாப்பிட்டால் நல்லது.
அசைவுகள் அதிகமில்லாத இருக்கைகளில் அமருங்கள். இது உங்களின் உடல் அசைவுகளை சமநிலையில் வைத்திருக்கும்.
வாகனம் சென்றுகொண்டிருக்கும் எதிர் திசையில் உள்ள இருக்கைகளில் உட்காருவதை தவிருங்கள்.
காரின் முன் இருக்கைகளில் அமர்ந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படாது.
பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது உபாதைகளை வலுபடுத்தும்.
காரில் பயணிக்கும்போது சன்னல்களை திறந்து வையுங்கள். புத்துணர்ச்சியான காற்றை சுவாசியுங்கள்.
இதேபோன்று பயண ஒவ்வாமை இருபவர்களோடு பயணம் செய்யாதீர்கள். இதுகுறித்து பயணம் செய்யும்போது பேசுவதை தவிர்க்க வேண்டும்.
# சிலருக்கு மருந்துகள் உட்கொள்வது கைக்கொடுக்கும். அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகலாம்.
கை மருத்துவமாக, இஞ்சி, புளி, மாங்காய், எலுமிச்சை ஆகியவற்றை பயணத்தின்போது உடன் வைத்துக்கொள்ளலாம்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்... பெண்களே உஷார்



Cervical Cancer என்பது பெண்களை அதிக அளவில் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இந்த வைரஸானது உறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்களுக்கு பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பகட்டத்திலேயே இந்த வைரஸின் தாக்கம் பெண்களுக்கு தெரியவருவதில்லை. மாறாக, பெண்களின் உடலிலேயே தங்கியிருக்கும் இந்த வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று தெரிந்துகொள்ளுங்கள்

அறிகுறிகள்

கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டமானது தடைபடும் போது கால்களில் வலி, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுவே முதல்நிலை அறிகுறியாகும்.
பெண்ணுறுப்பிலிருந்து அதிகமான திரவம் துர்நாற்றத்துடன் வெளிப்படுவது
பெண்களின் உடலில், திடீரென்று ஏற்படும் இரத்தபோக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், வலியும் உண்டாகி அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.
பாலியல் ரீதியான உறவின் போது வலி ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
தடுக்கும் முறைகள்

10 முதல் 11 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியினை கட்டாயம் போட வேண்டும். அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் 45 வயதிற்குள்ளாக போட்டு கொள்ளவேண்டும்.
கர்ப்பபையில் ஏற்படும் தொற்றுகள், வெள்ளைப் படுதல் போன்றவற்றினை அலட்சியப் படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்.

உஷார் மக்களே! இந்த உணவை சாப்பிட்டால் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுமாம்! ஆய்வில் வெளிவந்த தகவல்..



நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் வந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் அல்லவா..?

சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக உண்ண பலரும் விரும்புகின்றனர்.

அதில் குறிப்பாக சிக்கன் மற்றும் மீன் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளது....இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் அபாயம் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது

அமெரிக்காவில் உள்ள, ஹார்வார்டு டி.எச்.சான் பொதுநல பள்ளியின் நிபுணர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

ஆராய்சிக்காக, 86 ஆயிரம் பெண்களிமும்,17,104 ஆண்களிடமும் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது. இவர்களில் கிரில் சிக்கனை அதிகம் உண்டவர்களில் 37,123 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு முன் சர்க்கரை வியாதியோ,புற்றுநோயா,ரத்த அழுத்தம் உள்ளிட்ட எதுவும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.



இறைச்சி,சிக்கன் போன்றவற்றை அதிக அளவு வெப்பத்திற்கு உட்படுத்தப் படுவதால், அதில் உள்ள இன்சுலின் விஷத்தன்மை கொண்டதாக மாறி, மனிதர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும், ரத்த குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்தியும், ஒரு விதமான கொழுப்பு ரத்த நாளங்களின் உட்புறத்தில் சேர்ந்து அப்படியே பெரும் அடைப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் ரத்த ஓட்டம் பழுதுபட்டு உடனடியாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. ரத்த நாளமும் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இந்த தகவலை அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.